logo
home பலன்கள் ஏப்ரல் 07, 2018
பித்ருதோஷத்தால் பாதிப்படைபவர்கள் செய்யவேண்டிய பரிகாரம்
article image

நிறம்

ஜோதிடர்கள் சில நேரங்களில் நமது சாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கிறது, அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். என்ன காரணம் தெரியுமா? சித்திரை, ஆவணி. ஐப்பசி மாதத்தில் பிறந்தோருக்கும், மாத பிறப்புக்கு முன்பின் 15 நாழிகையில் பிறந்தோருக்கும் பிதுர்தோஷம் உண்டாகிறது. சாதகத்தில் சூரியனுடன் ராகு அல்லது கேது அல்லது சனி அல்லது மாந்தி இருப்பது பிதுர் தோஷம் என்று சொல்வார்கள். இவர்களுடன் குரு அல்லது புதன் சம்பந்தம் எனில் குலதெய்வ கோபமும் உண்டு என்கிறது ஜோதிட சாஸ்திரம். வீட்டில் பராமரிப்பு இல்லாமல் பெரியோர் கள் இறந்து விட்டார்கள் என்றாலோ துர் மரணங்களால்” விஷம், தற்கொலை போன்ற காரணங்களால் இறந்து பட்டிருந்ததாலோ அந்த காரணம் வருங்கால சந்ததியினருக்கு பிதுர் தோஷமாக உருவெடுத்து வந்து அவர்தம் நல்வாழ்வுக்கு தடையாக வந்தடையும் “ என்பது ஆன்றோர் கூற்று. எனவே அதற்கு தோஷப் பரிகாரமாக காசியில் பித்ரு சிரார்த்தம், அல்லது ஆயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் அல்லது கன்றுடன் கூட பசுவை தானம் செய்ய வேண்டும் இவ்வாறு செய்ய இயலாது எனில் ஓர் எளிய பரிகாரம், தினமும் காலையில் குளித்து சூரியனை நமஸ்காரம் செய்து பின்னர் கீழ் உள்ள சுலோகத்தை பொருளுணர்ந்து கூறிவிட்டு தூய்மையான இடத்தில் நீர் விட்டு காகத்திற்கு அன்னமிட வேண்டும். தினமும் இவ்வாறு செய்தால் பித்ருக்கள் மனமகிழ்ச்சியுடன் ஆசி வழங்குவார்கள் என்பதால் தோஷம் நீங்கப் பெற்று நல்வாழ்வு பெறுவது கண்கூடாக காணும் உண்மை. பித்ரு சுலோகம்.: ஓம் நம: பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவே மயாய ச ஸுகதாய ப்ரசன்னாய ஸுப்ரீதாய மகாத்மனே” “என் பிறப்பிற்குக் காரணமான முன்னோர் களே! தெய்வீக சக்தி பெற்றவர்களே! உங்கள் ஆசியால் எங்களுக்கு நல்வாழ்வும் மகிழ்ச்சியும் உண்டாகட்டும். நல்லவர்களால் போற்றப்படும் உங்களை வணங்குகிறோம்” என்பது இந்த சுலோகத்தின் பொருள். மானிட அவதாரம் எடுத்து வந்த இராம பிரான் இராமேஸ்வரத்தில் தனது தந்தை தசரதருக்கு” பிதுர் சிரார்த்தம் “செய்து வழிபட்டார். அஃது மானிட கடமைகளில் ஒன்று என்பதை வலியுறுத்தியுள்ளார். எனவே ஜோதிட அன்பர்களே! நாமும் ஸ்ரீராமபிரான் வழிநின்று நமது ஜென்ம கடன் தீர்த்து நல்வாழ்வு பெற்று சுபிட்சமாக வாழ்வோமாக. - நர்மதா மணிவண்ணன் லட்சுமிபுரம், தேனி மாவட்டம்.