logo
home பலன்கள் ஜூலை 16, 2019
கிரஹணங்களால் ஏற்படும் தீய சக்தியை குறைக்கும் கடலை எண்ணெய் விளக்கு, 100 மடங்கு பலன் தரும் ஜபம்
article image

நிறம்

பொதுவாக வீடுகளில் விளக்கேற்றுவதற்கு உகந்த எண்ணையாக நல்லெண்ணெய், இலுப்பை எண்ணை, நெய் போன்றவற்றை மட்டும் பயன்படுத்துவார்கள். கடலை எண்ணையை பயன்படுத்துவது கிடையாது.
கடலை எண்ணெயில் இருந்து வரும் ஒருவித நெடி பல தீமைகளை விளைவிக்கும் என்பதால் அந்த எண்ணையை நமது முன்னோர்கள் பூஜைக்கு பயன்படுத்துவதை தவிர்த்தனர்.
ஆனாலும், ஒருசில நாட்களில் அவசியம் கடலை எண்ணெயில் விளக்கு ஏற்றுவதையும் தவிர்க்க முடியாது என்று நமது முன்னோர் கூறியுள்ளனர். குறிப்பாக கிரஹணங்கள் ஏற்படும் தினங்களில் அவசியம் கடலை எண்ணெயில் விளக்கேற்றி வைக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
வருடத்திற்கு ஒரு சில நாட்களில்தான் கிரஹணங்கள் வருகிறது என்பதால், கடலை எண்ணெயில் விளக்கேற்றும் பழக்கத்தை அறவே மறந்துவிட்டனர் நமது மக்கள்.
உண்மையில் கிரஹணங்கள் ஏற்படும் சமயங்களில் ஒருவித கெடுதல்தரும் கதிர்வீச்சுக்கள் பூமியெங்கும் பரவும், இதன்காரணமாகத்தான் பரிசுத்தமாக விளங்கும் கோவில்களைக்கூட திறப்பது கிடையாது. கிரஹணங்கள் முடிந்ததும் ஒருசில பூஜை புணஸ்காரணங்களை செய்து ஆலயத்தை தூய்மைபடுத்திய பின்பே இறைவன் குடியிருக்கும் சன்னதிகளை திறப்பது வழக்கம்.
கிரஹணங் ஏற்படும் சமயங்களில் தீய கதிர்கள் பரவும், அந்த தீய கதிர்கள் மனிதர்களுக்கு ஒருசில உபத்திரவாதத்தை தரும் என்பதால் அந்த சமயத்தில் உணவருந்துவதை தவிர்த்தனர் நமது முன்னோர். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு தீய கதிர் வீச்சினால் எந்த கெடுதலும் ஏற்படக் கூடாது என்பதால் தனி அறையில் இருக்குமாறும் பார்த்துக்கொண்டனர், அதிகப்படியான உணவுகள் ஏதும் செய்யாமல் தவிர்த்தனர், அவ்வாறு அதிகப்படியான உணவு இருந்தாலும், அதில் ஒருசில தர்ப்பை புல்லை போட்டுவைத்தும், குடிநீரில் துளசி, அருகம்புல், தர்ப்பை புல் போன்றவற்றை போட்டு உணவையும், குடிநீரையும் பாதுகாத்தனர்.
இவ்வாறு கிரஹணங்களில் இருந்து தங்களை பாதுகாத்த நமது முன்னோர், கிரஹணங்களின் போது வெளிவரும் கெடுதல் சக்திகளை தடுக்கும் ஒரு வழிமுறையையும் கண்டறிந்தனர்.
அந்த வழிமுறைதான் கடலைஎண்ணெயில் விளக்கேற்றுவது. கிரகணங்களின் போது கடலை எண்ணையை ஒரு (பெரிய) அகலில் ஊற்றி அதில் ஏதேனும் விளக்கு திரியை போட்டு, ஒன்று அல்லது பல இடங்களில் கடலை எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்தனர் நமது முன்னோர்.
இவ்வாறு செய்வதால் கடலை எண்ணெய் விளக்கில் இருந்து வரும் ஒருவித நெடி வீடுகளில் பரவும்போது கிரஹணங்களால் ஏற்படும் தீய கதிர்களை அழித்துவிடுவதால் கிரஹணங்களால் ஏற்படும் பாதிப்பு குறையும் என்பதை கண்டறிந்து, கடலை எண்ணைய் தீபத்தை ஏற்றி வைத்தனர்.
மனிதகுலம் நன்றாக இருக்க வேண்டி பல நல்ல செயல்களையும், பழக்கவழக்கங்களையும் சொல்லி சென்ற நமது முன்னோர்களின் செயல்களில், இந்த கடலை எண்ணை தீப முறையும் ஒன்று. (முன்னோர் சொல்லியும் கடைபிடிக்காமல் விட்ட பல அற்புதங்களில், இந்த தீப முறையும் ஒன்று.)
கடலை எண்ணைய் தீபம் என்பதை கிரஹணங்கள் ஏற்படும் சமயங்களில் மட்டும்தான் ஏற்ற வேண்டும் என்பதையும் தெளிவாக சொல்லியுள்ளனர். கிரஹணங்கள் இல்லாத சமயங்களில் கடலை எண்ணைய் தீபத்தை ஏற்றக்கூடாது.
கிரஹண நேரங்களில் ஜபம் செய்வது மிகுந்த பலனைத் தரும், கிரஹண நேரத்தில் செய்யும் ஜபம் 100 மடங்கு அதிகப்படியான பலனை தரும்.