logo
home ஆன்மீகம் ஜூலை 21, 2021
எத்தனை பிரதோஷங்களைப் பார்த்தால் என்ன என்ன பலன் கிடைக்கும்?
article image

நிறம்

மனிதர்களிடம் அறியாமல் வரும் பாவங்களின் துயரத்தை போக்க ஈசனால் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் பிரதோஷம்,

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் 6 மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன. 

இன்னும் சுருக்கமாக கூறவேண்டுமென்றால், பெளர்ணமி மற்றும் அமாவாசைக்கு இரு தினங்களுக்கு முன் வரும் முக்கிய நிகழ்வு பிரதோஷம். இந்த பிரதோஷ வேளையில் தேவர்கள் அனைவரும், பூமியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்கு வந்து பூஜிப்பதாக ஐதீகம், அதனால்தான், இந்த நேரத்தில் மனிதர்களாகிய நாமும் சிவன் கோவிலில் நடைபெறும் பூஜையில் பங்கேற்றால், தேவர்களுடன் இணைந்து பூஜை செய்த பலன் கிடைக்கும்.

இந்தவகையில் பிரதோஷத்தில் தொடர்ந்து கலந்து கொண்டு ஈசனின் அபிஷேக ஆராதனைகளைப் பார்த்துவந்தால், பிரம்மஹத்தி தோஷம் கூட விலகிச் செல்லும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

அந்தவகையில், பிரதோஷ நிகழ்வை எத்தனை முறை பார்த்தால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை விரிவாக பார்ப்போம்.


பிரதோஷ பலன்

3 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் பிரம்மா. விஷ்ணு, சிவன் முதல் மூன்று தெய்வங்களும் பார்ப்பதற்கு சமம்.

5 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் உடலில் உள்ள அனைத்து நோய்களும் நீங்கும்.

7 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.

11 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் உடலும், மனமும் வலிமை பெற்று புது தெம்பு கூடும்.

13 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் நினைத்த காரியம் தங்கு தடையின்றி நடைபெறும்.

21 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

33 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் சிவன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

77 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு ருத்ர யாகம் செய்த பலன் கிடைக்கும்.

108 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு தேவேந்திர பூஜை நடத்தியதற்கு சமம்.

121 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் அடுத்த ஜென்மம் கிடையாது.

1008 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு அஷ்வமேதயாகம் நடத்தியதற்கு சமம்.