logo
home மருத்துவம் மே 22, 2016
மக்களை முட்டாளாக்கி காசு பார்த்த டூத் பேஸ்ட் கம்பெனிகளை மறந்து நமது முன்னோர் தந்த இயற்கை முறைக்கு திரும்புவோம்
article image

நிறம்

உங்க பேஸ்ட்ல உப்பு இருக்க?, கரித்தூள் இருக்கா?, வேம்பு இருக்கான்ன இன்றைக்கு தொலைக்காட்சியில் பல்வேறுவிளம்பரங்கள் வருகின்றன, ஆனால் ஆரம்பத்தில், இன்னுமா கரித்தூள், உப்பு, வேம்புல பல் துலக்குறீங்கன்னு ஏமாற்றும் வார்த்தைகளை கூறி பேஸ்ட்டை இந்தியாவில் அறிமுகப் படுத்தியவர்களே இன்றைக்கு உப்பு, கரித்தூள், வேம்பில் உள்ள இயற்கை மருத்துவமுறையை பார்த்து வியந்து போய் தங்களது பேஸ்ட்டிலும் மேற்கண்டவற்றை புகுத்தி மக்கள் தலையில் கிலோ கணக்கில் மிளகாய் அரைக்கின்றனர். அக்காலத்தில் பற்களைத் துலக்குவதற்கு எந்த பிரஷ்ஷும், டூத் பேஸ்ட்டும் இல்லை. நம் முன்னோர்கள் தங்களது பற்களைத் துலக்குவதற்கு சாம்பல், வேப்பங்குச்சி, ஆலமரக் குச்சி, அதிமதுரக் குச்சிகளைத் தான் பயன்படுத்தி வந்தார்கள். இதனால் தான் அவர்களுக்கு எந்த ஒரு ஈறு பிரச்சனைகளும், பல் பிரச்சனைகளும், ஏன் வேறு எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனைகளும் வரவில்லை எனலாம். ஏனெனில் இயற்கை பொருட்கள் எதிலும் எந்த ஒரு கெமிக்கல்களும் இருப்பதில்லை. அதிலும் அக்காலத்தில் எங்கும் மரங்கள் இருந்ததால், தங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் வீணாக நினைக்காமல் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் இன்று பற்களைத் துலக்குவதற்கு ஏகப்பட்ட டூத் பேஸ்ட்டுகள், டூத் பிரஷ்கள் விற்கப்படுவதோடு, அவற்றால் வாய் சுத்தமாகிறதோ இல்லையோ, வாய் பிரச்சனைகள் அதிகமாகத் தான் உள்ளது. எனவே என்ன தான் நவீன உலகமானாலும், எப்போதுமே நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த பழக்கங்களை மறக்காமல் பின்பற்றி வந்தால், நிச்சயம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். பணத்தை மிச்சப்படுத்துவதுடன் ஆரோக்கியத்தையும் இழக்காமல் இருக்கலாம். ஈறு நோய்கள் :- வேப்ப மரக்குச்சியை மெல்லும் போது அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் ஜூஸ்கள் ஈறுகளைத் தாக்கிய கிருமிகளை அழித்து வெளியேற்றிவிடும். ஈறுகளில் இரத்தக்கசிவு பிரச்சனை இருந்தால், மருத்துவரிடம் செல்வதற்கு முன், வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்கி வாருங்கள். இதனால் உங்கள் ஈறுகளில் இதுவரை இருந்த பிரச்சனைகள் முற்றிலும் அகலும். சொத்தை பற்கள் :- பற்களைத் துலக்குவதற்கு வேப்பங்குச்சியை மெல்லும் போது, அதிலிருந்து வெளிவரும் சாறு பற்களை சொத்தை செய்யும் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளை முற்றிலும் அழித்துவிடும். மேலும் தினமும் வேப்பங்குச்சியால் இரண்டு முறை பற்களைத் துலக்கி வந்தால், சொத்தைப் பற்கள் போய்விடும். வாய் துர்நாற்றம்:- வாயில் கிருமிகள் அதிகம் இருப்பதனால் தான் வாய் துர்நாற்றம் வீசுகிறது. அத்தகைய கிருமிகளை முழுமையாக வெளியேற்றி, வாயை புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ள வேப்பங்குச்சியால் தினமும் பற்களைத் துலக்குங்கள். முக்கியமாக தினமும் இரவில் படுக்கும் முன் வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்கினால் வாய் துர்நாற்றம் விரைவில் நீங்கும். பல் வலி :- வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்கி வருபவர்களுக்கு, பல் வலி வரவே வராது. இதற்கு வேப்பங்குச்சியில் உள்ள சக்தி வாய்ந்த உட்பொருட்கள் தான் முக்கிய காரணம். மஞ்சள் பற்கள் மற்றும் பற்காறை :- உங்களுக்கு பற்கள் மஞ்சளாகவும், பற்களின் பின் பற்காறைகள் இருந்தால், வேப்பங்குச்சியால் பற்களை தினமும் துலக்கி வாருங்கள். இதனால் அதில் உள்ள மருத்துவ குணங்களால், பற்களல் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்குவதோடு, பற்காறைகளும் விரைவில் அகலும். வாய்ப்புண் :- வாய்ப்புண் இருப்பவர்கள், வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்கி வந்தால், வாய்ப்புண் சீக்கிரம் குணமாகும். வலிமையான பற்கள் :- வேப்பங்குச்சியால் தினமும் பற்களைத் துலக்கி வந்தால், பற்கள் வலிமையடையும். மேலும் வாயின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களையும் முழுமையாக வெளியேற்றிவிடும். நமது குழந்தைகளுக்கும் இந்த முறையை கற்பித்து அவர்களின் தலைமுறையையாவது இயற்கையுடன் ஒன்றி வளர உதவியாக இயற்கையை அவர்களுக்கு எடுத்துரைப்போம். குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www. aanmeegamalar.com எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com