logo
home ஆன்மீகம் ஏப்ரல் 09, 2016
தோஷம், பில்லி, சூன்யத்தை அண்டவிடாமலும், குடும்பம் ஒற்றுமைக்கும், சகோதரர்கள் சுகமாக வாழவும் உதவும் காக்கை பூஜை
article image

நிறம்

தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப்பொங்கல்வைக்கஉபயோகிக்கிறோமே ) ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும். உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் , அதையே மாற்றக்கூடியசக்தி இதற்கு உண்டு என்கிறார். இதை தவிர நாம் ஏற்கனவே கூறியபடி, வன்னி மரவிநாயகருக்கு பச்சரிசிமாவு படித்தாலும், சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம் படித்தாலும், ஒரு மிகப்பெரிய கவசம் போல் பாதுகாக்கும். மனித வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள்,விபத்துக்கள், வீண் பழி போன்றவை காகத்திற்கு சாப்பாடு வைப்பவர்களின் அருகில் கூட நெருங்காது.. அதுமட்டுமல்ல செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது. தீராத கடன் தொல்லைகள், புத்திரசந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும், உங்கள் நியாயமான அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில்மிக முக்கிய பங்கு வகிப்பது, உங்கள் முன்னோர் வழிபாடுதான். உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான ஜீவ ராசி – காக்கை இனம். குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலிபெண்கள் காக்கைகளை வழிபடுவதுவழக்கம். தன் உடன்பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க, தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத்திகழ இந்த காணுப் பிடிபூஜையைச்செய்கிறார்கள். திறந்த வெளியில் தரையைத்தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பிஅதில் வண்ண வண்ண சித்ரான்னங்களை ஐந்து, ஏழு, ஒன்பதுஎன்ற கணக்கில்கைப்பிடிஅளவுஎடுத்துவைத்து, காக்கைக்கு உணவு படைப்பார்கள். அந்தக்காக்கைகள் உணவினைச் சாப்பிட்டுச் சென்றதும், அந்தவாழை இலையில் பொரி, பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள், வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள். மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்) காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர். இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை வழிபடுவதால் சனிபகவானைத்திருப்திப்படுத்தியதாவும் கருதுகிறார்கள். காக்கை சனிபகவானின் வாகனம். காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம். காக்கைகளில் நூபூரம்,பரிமளம், மணிக்காக்கை, அண்டங்காக்கைஎனசிலவகைகள்உண்டு. காக்கையிடம் உள்ளதந்திரம் வேறு எந்தப்பறவைகளிடமும் காணமுடியாது. எமதர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால்காக்கைக்குஉணவுஅளித்தால் எமன்மகிழ்வாராம். எமனும் சனியும்சகோதரர்கள்ஆவர். அதனால், காக்கைக்கு உணவிடுவதால் ஒரேசமயத்தில் எமனும்சனியும் திருப்தியடைவதாகக்கருதப்படுகிறது. காலையில் எழுவதற்குமுன், காக்கையின்சத்தம்கேட்டால்நினைத்தகாரியம்வெற்றிபெறும். காக்கைகள் நமக்குஅருகில்அல்லதுவீட்டின்வாசலைநோக்கிக்கரைந்தால்நல்லபலன்உண்டு.