logo
home தத்துவம் ஜூன் 16, 2016
துறவியாக மாற, முழு தகுதி என்ன? விவேகானந்தரிடம்  அவரது  தாய் கூறிய அனுபவபூர்வ அறிவுரை
article image

நிறம்

சுவாமி விவேகானந்தர் துறவறம் மேற்கொள்ள வேண்டும் எனும் எண்ணத்தில் தம் அன்னையிடம் அனுமதி கேட்கச் சென்றார்.

அவர் அன்னை அவரை ஒரு கத்தியை எடுத்து வரச் சொன்னார்.

அன்னை சொன்ன படியே அவரும் ஒரு கத்தியை எடுத்து வந்தார்.

அதைப் பார்த்துவிட்டு அன்னை அவரிடம் சொன்னார்”இப்போது வேண்டாம்.இன்னும் சில நாள் போகட்டும் என்றார்

சில மாதங்கள் கழிந்தபின் சுவாமி மீண்டும் தன் தாயிடம் அனுமதி கேட்டார்.

அவர் முன்பு போலவே ஒரு கத்தியை எடுத்து வரச் சொன்னார்.
விவேகானந்தரும் எடுத்துச் சென்றார்.தாய் சில காலம் போகட்டும் எனச் சொல்லி விட்டார்.

இதே போல் ஓரிரு முறை நடந்தபின்.கடைசி முறை அவர் அம்மா சொன்னது போல் கத்தியை எடுத்துச் செல்லவும்,அவர் பார்த்து விட்டு இப்போதுதான் நேரம் வந்திருக்கிறது,நீ துறவறம் மேற்கொள்ள” என்று சொன்னார்.

விவேகானந்தர் தாயிடம் முன்பு அனுமது மறுத்த,இப்போது அளித்த காரணத்தைக் கேட்டார்.

தாய் சொன்னார் “முன்பெல்லாம் நீ கத்தியை எடுத்து வரும்போது,பிடி உன் பக்கமும்,கூர் முனை என் பக்கமும் இருக்குமாறு எடுத்து வருவாய்.ஆனால் இன்றுதான்,முனை உன்பக்கமும் பிடி என் பக்கமும் இருக்குமாறு எடுத்து வந்தாய்.

ஒரு துறவி என்பன் பிறருக்குத் துன்பம் தராமல்,அவர் துன்பங்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நன்மை மட்டுமே செய்ய வேண்டும்.அதையே இந்தக் கத்தி பிடித்த கை உணர்த்துகிறது”

குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 
தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம் 
 www. aanmeegamalar.com 
எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com 




குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 

தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம் 
      

www. aanmeegamalar.com 


எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com