logo
home ஆன்மீகம் மே 05, 2019
வருடம் முழுவதும் சந்திர வழிபாட்டு பலனை தரும் சோமாவார மூ‌ன்றா‌ம் பிறை தரிசனம்
article image

நிறம்

அமாவாசை முடிந்து இரண்டாவது நாளில் வெளிப்படக்கூடிய பிறைதான் மூன்றாம் பிறை. அமாவாசை அன்றும், அதற்கு மறுநாளும் சந்திரன் தெரியாது. அதற்கு மறுநாள்தான் சந்திரன் மிளிரும். ஒரு கோடு போல ஒளிக்கீற்றாக வரும். அதனை ஏதாவது ஒரு வெட்டவெளியில் இருந்தோ, ஒரு கிராமத்தில் இருந்தோ, மின் விளக்குக‌ள் இல்லாத இடத்தில் இருந்து அடிவானத்தில் தோன்றும் போது அதன் பிரகாசத்தைப் பார்த்தால், அது உங்களுக்குள் ஏதோ ஒன்றைத் தூண்டும். முழு நிலவு எனு‌ம் பெளர்ணமி நிலவு தூண்டாத சில விஷயங்களை இந்த மூன்றாம் பிறை நிலவு நமக்குத் தூண்டும். வளர்ந்த பிள்ளைகளை விட வளரும் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளைப் பார்க்கும் போது நமக்கு ஒரு உற்சாகம் வருகிறதல்லவா, அந்தத் தூண்டுதலும், உற்சாகமும் மூன்றாம் பிறையில் தெரியும். மூன்றாம் பிறை என்பது தெய்வீக அம்சமாக உள்ளது. அந்தப் பிறையை கண்டு வணங்குவது ஆயுளைவிருத்தியாக்கும், செல்வங்களைச்சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற_தோஷங்களை நீக்கும். அதுவும், திங்கட்கிழமையுடன் மூன்றாம் பிறை வரும்போது, சோமவாரம் என்பார்கள் திங்கட்கிழமையை. அந்த சோமவாரத்தில் வரும் மூன்றாம்பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை_வணங்கிய பலன்கள் எல்லாம் #கிடைக்கும்.